ஜெனிவாவில் இடம்பெறவிருக்கும் மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றே எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில் இந்தியாவும் அதை ஆதரிக்கும் எனும் அரசியல் சூழ் நிலை உருவாகியுள்ளது.

தமிழ் நாட்டில் தற்போது சூடு பிடித்துள்ள இவ்விவகாரத்தினால் தமிழக அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்து வருகின்றன.

இதனடிப்படையிலேயே அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானத்தினை ஆதரிக்கப் போவதாக இந்தியாவும் அறிவித்துள்ளது.

எனினும், சனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட ஆவணப் படம் உண்மைக்குப் புறம்பானது என மறுத்து வரும் இலங்கை அரச தரப்பு அதற்கெதிரான மறுப்புரைகளை சர்வதேச ரீதியில் வெளியிட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவே கடந்த வருடம் ஜுலை மாதம் இதே சனல் 4 தொலைக்காட்சியில் இந்தியா காஷ்மீர் தொடர்பான ஆவணப் படமொன்று வெளியாகியிருந்தமையை சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்டுள்ளார் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.

கற்களை வீசும் இளைஞர்களுக்கு எதிராக துப்பாக்கி சூடு நடத்தும் இந்திய இராணுவம் என அவ்வாவணத்தில் விபரிக்கப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.

இந்திய ஊடகங்களுக்கே தெரியாமல் அங்கு பிரசன்னமாகியிருந்த பிரித்தானிய ஊடகமான சனல் 4 தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் இது திட்டமிட்டு செயற்படுத்தப்படும் சர்வதேச விவகாரம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தருவாயில் இந்திய ஊடகங்கள் இதற்கெதிராக குரல் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts