நோர்வையில் இருபத்தி நான்கு மணி நேரமும் சூரியன் வானில் தென் படுகின்றது
இஸ்லாமியர்களின் ஒரு சில வணக்கங்கள் நேரத்தை குறிப்பிட்டு செய்யப்படும்
வணக்கமாக இருக்கின்றது என்பதால் குறித்த பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம்
மக்கள் எவ்வாறு நோன்பு போன்ற அமல்களை சரிவர நிறை வேற்றுவார்கள்? சூரியன்
மறையும் போது தானே நோன்பு திறக்க வேண்டும்? சூரியன் மறையாமல் உள்ள
பகுதியில் நோன்பு போன்ற வணக்கங்களை நிறை வேற்றுவது சாத்தியம் அற்றது ஆகவே
இஸ்லாம் எக்காலச்த்துக்கும் பொருத்தமான மார்க்கம் இல்லை *நமது பதில்
எக்காலத்துக்கும் எந்நிலையிலும் உள்ள மனிதருக்கு தீர்ப்பு கூறும் ஒரே
மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் தான் மதத்துடன் தொடர்புடைய அனைத்து
கேள்விகளுக்கும் இஸ்லாத்தில் பதில் உண்டு காரணம் இஸ்லாம் என்பது நம்மை
படைத்த ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனால் உருவாக்கப்பட்ட உண்மையான மதம் இஸ்லாம்
மாத்திரம் தான்..
இஸ்லாமிய வணக்கங்கள் அனைத்தும் எதோ ஒருவகையில்
காலத்துடன் நேரத்துடன் தொடர்புபடக்கூடியவை என்பதில் எமக்கு மாற்று கருத்து
இல்லை அதே போல் கால நிலை மாற்றம் ஏற்படும் போது அந்த வணக்கத்தை எவ்வாறு
செய்ய வேண்டும் என்பதையும் இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன் நமக்கு கற்று
தந்து விட்டது சூரியன் மறையாமல் இருக்கின்ற களத்தில் வருடத்தில் ஒரு மாதம்
வருகின்ற நோன்பைவிட ஒவ்வொரு நாளும் ஐவேலை ஒரு முஸ்லிம் நிறை வேற்ற வேண்டிய
தொழுகை போன்ற அமலை கூட எவ்வாறு நிறைவேற்றுவது என்று நபிகாளாரிடம்
வினவப்பட்ட போது இவ்வாறு பதில் கூறினார்கள்
பொருள்: {தஜ்ஜாலை பற்றி நபிகளார் கூறிய ஹதீஸின் ஒரு பகுதி}
"அல்லாஹ்வின் தூதரே! அவன் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பான்?"
என்று கேட்டோம். அதற்கு, "நாற்பது நாட்கள்" என்று பதிலளித்த நபியவர்கள்,
"அன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும், மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும்,
அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும், மற்ற நாட்கள் உங்களின்
(சாதாரண) நாட்களைப் போன்றும் இருக்கும்" என்று குறிப்பிட்டார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஓர் ஆண்டிற்குச் சமமாக இருக்கும் அந்த ஒரு
நாளில், வழக்கமாகத் தொழும் (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதால் போதுமா?" என்று
கேட்டோம். அதற்கு நபியவர்கள், "இல்லை (போதாது);அந்த (நீண்ட) நாளை,
அதற்கேற்ப மதிப்பிட்டு(த் தொழுது)கொள்ளுங்கள்" என்று பதிலளித்தார்கள்.
தமிழில் பார்க்க {முஸ்லிம்:5629}
இரவு பகல் மாறி மாறி வராத பிரதேசத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களும் இந்த
ஹதீஸின் அடிப்படையில் நேரத்தை கணிப்பிட்டு அவர்கள் செயல்பட வேண்டும்
0 கருத்துகள்: