அமைச்சர்
டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ள விதமாக பொதுபல சேனா அமைப்பு ஒரு முஸ்லிம்
நபருக்கு, முஸ்லிம் வர்த்தக நிலையொன்றுக்கு அல்லது முஸ்லிம் பள்ளிவாயல்
ஒன்றுக்கு தாக்குதல் நடத்தியுள்ளதாக நிரூபித்தால் தாம் மகியங்கனையிலுள்ள
விகாரைக்குச் சென்று தனது காவி உடையை கழற்றிவிடுவதாக பொதுபல சேனா அமைப்பின்
பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு
நிரூபிக்காவிடின், அமைச்சர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் இருந்து விலக
வேண்டுமெனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளாரர். 'இவ்வாறு பொய்கூறும்
உறுப்பினர்களுக்கு இனிமேலும் வாக்களிக்க வேண்டாம்" என அவர்
தெரிவித்துள்ளார். மகியங்கனையில்
02-08-2013 பிற்பகல் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் மக்கள் சந்திப்பில்
கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாரர்.
0 கருத்துகள்: