ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று நாவலப்பிட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே..

அவர்கள் நாவலப்பிட்டி நகருக்கு அருகிலுள்ள வெலிகம்பொல தொங்கு பாலத்துக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இறங்கி குளித்து நீரில் மூழ்கி உயிரிழந்த இடம் இதுதான்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை, வட்டதெனிய பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 12 பேர் இன்று வாகனமொன்றில் சிவனொளிபாதமலைக்குச் செல்லும் வழியில் நாவலப்பிட்டி நகருக்கு அருகிலுள்ள வெலிகம்பொல தொங்கு பாலத்துக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.

இதன் போது ஆழமான பகுதி ஒன்றில் நீராடிக் கொண்டிருந்த சாரதி உட்பட ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பின்பு உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையின் சவச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டன.

சுமித் (வயது 20), கசுன் (24 வயது), சமிந்த (வயது 27), சமான் (வயது 23) மற்றும் 25 வயதுடைய சாரதி ஆகியோரே சம்பவத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களாவர்.

இந்தச்சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி எஸ்.கே.தொலவத்தை, உதவி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.விஜயசிங்ஹ ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று நாவலப்பிட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே..

அவர்கள் நாவலப்பிட்டி நகருக்கு அருகிலுள்ள வெலிகம்பொல தொங்கு பாலத்துக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இறங்கி குளித்து நீரில் மூழ்கி உயிரிழந்த இடம் இதுதான்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

கம்பளை, வட்டதெனிய பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 12 பேர் இன்று வாகனமொன்றில் சிவனொளிபாதமலைக்குச் செல்லும் வழியில் நாவலப்பிட்டி நகருக்கு அருகிலுள்ள வெலிகம்பொல தொங்கு பாலத்துக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.

இதன் போது ஆழமான பகுதி ஒன்றில் நீராடிக் கொண்டிருந்த சாரதி உட்பட ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பின்பு உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையின் சவச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டன.

சுமித் (வயது 20), கசுன் (24 வயது), சமிந்த (வயது 27), சமான் (வயது 23) மற்றும் 25 வயதுடைய சாரதி ஆகியோரே சம்பவத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களாவர்.

இந்தச்சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி எஸ்.கே.தொலவத்தை, உதவி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.விஜயசிங்ஹ ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts