சென்ற மாதம் அமிலம் வீசி தாக்கப்பட்ட ஆதம்பாக்கம் வித்யாவை மருத்துவ மனையில் சென்று சந்தித்தோம். வித்யாவின் நிலை சற்று கவலைக் கிடமாகத் தான் உள்ளது. அவரால் எந்த செயலையும் செய்ய முடியவில்லை . நீங்கள் படத்தில் பார்க்கும் காட்சி வித்யாவிற்கு அவரது தாயார் பணிவிடை செய்கிறார் . அவரது வாயை துணியால் துடைக்கிறார். எந்த ஒரு அசைவையும் வித்யாவால் செய்ய இயலவில்லை. உணவு கூட ஒரு குழாயின் மூலமாக மூக்கின் வழியாக செல்கிறது .

அமிலம் வீசிய கொடூரன் வித்யாவின் மீது அமிலம் வீசிய பின்னும் வித்யாவின் தலைமுடியை பிடித்து இழுத்து சுவற்றில் அவரை முட்டச் செய்து அடித்துள்ளான். அவனது வெறி விரைவில் அடங்கவில்லை. தொடந்து தாக்குதல் நடத்தி உள்ளான். அதன் பிறகு தான் பொதுமக்கள் அவனை பிடித்து அடித்துள்ளனர் . அதற்கு பின் காவல் துறையிடம் ஒப்படைக்கப் பட்டான் அந்த கொடூரன். வித்யாவின் தலையில் பலத்த தீக் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தலையில் மூடியிருந்த துப்பாட்டா அமிலம் பட்டு தலையோடு ஒட்டிக் கொண்டுள்ளது . உடல் முழுவதும் பலத்த தீக் காயம் . 38 விழுக்காடு தீக் காயங்களுடன் வித்யா மருத்துவ மனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

மருத்துவ செலவை அரசு மருத்துவமனை ஏற்றுக் கொண்டாலும் , அவரது குடும்பத்திற்கு தினமும் 300 ருபாய் வரை மருத்துவமனையில் மேல் செலவாகிறது . வித்யாவிற்கு அப்பா இல்லை . அம்மாவும் ஒரு தம்பியும் தான் . அம்மா வீட்டு வேலை செய்து வருகிறார் . மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பம். அதனால் வித்யாவிற்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளித்தாலும் , பிற செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடுகிறார் அவரது தாயார்.

இன்று நாம் தமிழர் மருத்துவ பாசறை சேர்ந்த மருத்துவர்கள் வித்யாவின் நிலையை ஆய்வு செய்ய உள்ளனர் . அதன் பின் வித்யாவை தனியார் மருத்துவ மனைக்கு மாற்றலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கலாம் என்று கூறி உள்ளனர் . வித்யாவும் , இந்த மருத்துவமனை வேண்டாம் என கூறி வருகிறார் . காரணம் அங்குள்ள சூழ்நிலை அவரை பாதித்துள்ளது . சுற்றிலும் தீக்காயங்களுடன் பல நோயாளிகள் , எங்கும் துர்நாற்றம் என அவரது மனநிலையை பாதித்துள்ளது. அவர் பிழைப்பதற்கு நல்ல சூழ்நிலையை நாம் உருவாகித் தர வேண்டும். நல்லுள்ளம் கொண்ட தோழர்கள் வித்யாவிற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் . வித்யாவை எப்படியாவது காப்பாற்றுவோம் . கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை . 102 தீக்காயம் பிரிவு முதல் தளத்தில் சிகிச்சை பெற்றுவரும் வித்தியாவை
பல அரசியல் கட்சித் தலைவர்களும் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டுகிறோம். அதேவேளை உதவ விரும்பும் உறவுகளுக்கு விரைவில் வித்யாவின் வங்கி கணக்கு விபரத்தை அறிவிப்போம். நன்றி.



via - Rajkumar Palaniswamy.
சென்ற மாதம் அமிலம் வீசி தாக்கப்பட்ட ஆதம்பாக்கம் வித்யாவை மருத்துவ மனையில் சென்று சந்தித்தோம். வித்யாவின் நிலை சற்று கவலைக் கிடமாகத் தான் உள்ளது. அவரால் எந்த செயலையும் செய்ய முடியவில்லை . நீங்கள் படத்தில் பார்க்கும் காட்சி வித்யாவிற்கு அவரது தாயார் பணிவிடை செய்கிறார் . அவரது வாயை துணியால் துடைக்கிறார். எந்த ஒரு அசைவையும் வித்யாவால் செய்ய இயலவில்லை. உணவு கூட ஒரு குழாயின் மூலமாக மூக்கின் வழியாக செல்கிறது . 

அமிலம் வீசிய கொடூரன் வித்யாவின் மீது அமிலம் வீசிய பின்னும் வித்யாவின் தலைமுடியை பிடித்து இழுத்து சுவற்றில் அவரை முட்டச் செய்து அடித்துள்ளான். அவனது வெறி விரைவில் அடங்கவில்லை. தொடந்து தாக்குதல் நடத்தி உள்ளான். அதன் பிறகு தான் பொதுமக்கள் அவனை பிடித்து அடித்துள்ளனர் . அதற்கு பின் காவல் துறையிடம் ஒப்படைக்கப் பட்டான் அந்த கொடூரன். வித்யாவின் தலையில் பலத்த தீக் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தலையில் மூடியிருந்த துப்பாட்டா அமிலம் பட்டு தலையோடு ஒட்டிக் கொண்டுள்ளது . உடல் முழுவதும் பலத்த தீக் காயம் . 38 விழுக்காடு தீக் காயங்களுடன் வித்யா மருத்துவ மனையில் உயிருக்கு போராடி வருகிறார். 

மருத்துவ செலவை அரசு மருத்துவமனை ஏற்றுக் கொண்டாலும் , அவரது குடும்பத்திற்கு தினமும் 300 ருபாய் வரை மருத்துவமனையில் மேல் செலவாகிறது . வித்யாவிற்கு அப்பா இல்லை . அம்மாவும் ஒரு தம்பியும் தான் . அம்மா வீட்டு வேலை செய்து வருகிறார் . மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பம். அதனால் வித்யாவிற்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளித்தாலும் , பிற செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடுகிறார் அவரது தாயார். 

இன்று நாம் தமிழர் மருத்துவ பாசறை சேர்ந்த மருத்துவர்கள் வித்யாவின் நிலையை ஆய்வு செய்ய உள்ளனர் . அதன் பின் வித்யாவை தனியார் மருத்துவ மனைக்கு மாற்றலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கலாம் என்று கூறி உள்ளனர் . வித்யாவும் , இந்த மருத்துவமனை வேண்டாம் என கூறி வருகிறார் . காரணம் அங்குள்ள சூழ்நிலை அவரை பாதித்துள்ளது . சுற்றிலும் தீக்காயங்களுடன் பல நோயாளிகள் , எங்கும் துர்நாற்றம் என அவரது மனநிலையை பாதித்துள்ளது. அவர் பிழைப்பதற்கு நல்ல சூழ்நிலையை நாம் உருவாகித் தர வேண்டும். நல்லுள்ளம் கொண்ட தோழர்கள் வித்யாவிற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் . வித்யாவை எப்படியாவது காப்பாற்றுவோம் . கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை . 102 தீக்காயம் பிரிவு முதல் தளத்தில்  சிகிச்சை பெற்றுவரும் வித்தியாவை 
பல அரசியல் கட்சித் தலைவர்களும் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டுகிறோம். அதேவேளை உதவ விரும்பும் உறவுகளுக்கு விரைவில் வித்யாவின் வங்கி கணக்கு விபரத்தை அறிவிப்போம். நன்றி.



via - Rajkumar Palaniswamy.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts