உலகில் தலைசிறந்த உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லே தயாரிப்புகளில் குதிரை மாமிசம் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
பிரபல நெஸ்ட்லே நிறுவனம் பலவகை உணவுப் பொருட்களை தயாரித்து உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது.
இந்நிலையில் இந்த கலப்பட புகார் காரணமாக, நெஸ்ட்லே நிறுவனம் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள ஒப்பந்த கம்பெனிகளிடமிருந்து பொருட்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளது.
முதலில் இந்த குதிரைமாமிச கலப்பு புகாரை மறுத்த நெஸ்ட்லே நிர்வாகம் தற்போது தவறை ஒப்புக் கொண்டுள்ளது.
சுவையும், தரமும் காரணமாக நெஸ்ட்லேவின் தயாரிப்புகளை பொதுமக்கள் விரும்பி வாங்குவது வழக்கம். ஆனால் தற்போது குதிரை இறைச்சியை கலப்படம் செய்ததை நெஸ்லே ஒப்புக்கொண்டுள்ளதால் இதன் வியாபாரம் பாதிக்கும் அபாயம் ஏற்றபட்டுள்ளது.
இது குறித்து நெஸ்ட்லே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நிறுவனம் தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும், வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம்.
மேலும் எங்கள் நிறுவனத்திற்கு பொருட்கள் சப்ளை செய்யும் இரண்டு கம்பெனிகளின் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால் இந்த இரண்டு நிறுவனத்திடமிருந்தும் பொருட்கள் வாங்குவதை நிறுத்திவிட்டோம்.
எதிர்காலத்தில், இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நெஸ்ட்லே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரபல நெஸ்ட்லே நிறுவனம் பலவகை உணவுப் பொருட்களை தயாரித்து உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது.
இந்நிலையில் இந்த கலப்பட புகார் காரணமாக, நெஸ்ட்லே நிறுவனம் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள ஒப்பந்த கம்பெனிகளிடமிருந்து பொருட்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளது.
முதலில் இந்த குதிரைமாமிச கலப்பு புகாரை மறுத்த நெஸ்ட்லே நிர்வாகம் தற்போது தவறை ஒப்புக் கொண்டுள்ளது.
சுவையும், தரமும் காரணமாக நெஸ்ட்லேவின் தயாரிப்புகளை பொதுமக்கள் விரும்பி வாங்குவது வழக்கம். ஆனால் தற்போது குதிரை இறைச்சியை கலப்படம் செய்ததை நெஸ்லே ஒப்புக்கொண்டுள்ளதால் இதன் வியாபாரம் பாதிக்கும் அபாயம் ஏற்றபட்டுள்ளது.
இது குறித்து நெஸ்ட்லே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நிறுவனம் தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும், வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம்.
மேலும் எங்கள் நிறுவனத்திற்கு பொருட்கள் சப்ளை செய்யும் இரண்டு கம்பெனிகளின் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால் இந்த இரண்டு நிறுவனத்திடமிருந்தும் பொருட்கள் வாங்குவதை நிறுத்திவிட்டோம்.
எதிர்காலத்தில், இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நெஸ்ட்லே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: