தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன.



ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன.

இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் நிறைவேறியதாக ஜெனிவாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இறுதிக் கட்டப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசசாங்கம் நம்பகரமான விசாரணையை நடத்த வேண்டும் என அமெரிக்கா இந்தத் தீர்மானத்தில் கோரியுள்ளது.



இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடக்கின்றன.



எனினும் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்படாமல் இருக்கின்றமை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பெரும் விசனங்கள் வலுத்துவருகின்றன.



போருக்குப் பின்னரும் நாட்டில் மனித உரிமை மீறல்களும் கடத்தல்களும் ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்களும் அதிகரித்துவருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.



இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை கடுமையாக மறுத்துவருவதுடன் மேற்குலகத்திற்கும் அமெரிக்காவுக்கும் எதிராக உள்நாட்டில் கடும்போக்குவாதிகள் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகளை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts