சுதந்திர சதுக்கத்தில் இருந்து பௌத்த கொடிகளை அகற்றுமாறும், முன்னாள் பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்கவின் உருவச் சிலையை சுதந்திர சதுக்கத்தில் இருந்து நீக்கவேண்டுமெனவும் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்தீர்களா என எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதன் பிள்ளையிடம் கடிதம் ஒன்றின் கேட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் இலங்கைக்கான விஜயத்தின் போது அரசிடம் அவ்வாறானதொரு கோரிக்கை முன்வைத்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கடிதம் ஒன்றின் மூலம் தெளிவுப்படுத்துமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்க சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் மட்டுன்றி, தமது கட்சியின் முதலாவது தலைவரும் என தமது கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதன்காரணமாக அரசாங்கத்தின் இவ்வாறான கருத்துக்கள் குறித்து துரிதமாக தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அதனை எதிர்ப்பார்த்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

என்றபோதிலும் ஆங்கில வார இதழ் ஒன்றுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, ‘அவர் கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள டி.எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலை, பௌத்த கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.” என தெரிவித்திருந்தார்.

‘அரசியல் போதமிருந்தாலும், இந்த நாட்டின் பிரதமர; தொடர்பாக அவ்வாறான கருத்தை தெரிவிக்க அவருக்கு இருக்கும் அதிகாரம் என்ன? அரசியலமைப்பில் பௌத்த தர்மத்தை பாதுகாப்பதற்கான உறுதிமொழியொன்று உள்ளது. அவருக்கு அவ்வாறு கேள்வி எழுப்புவதற்கு உரிமையில்லை. அவர் அவ்வாறான விடயத்தில் எல்லை மீறியுள்ளார்.” என கோட்டாபய ராஜபக்ர மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts