சவூதியைச் சேர்ந்தவர் என நினைத்து நபரொருவரை திருமணம் செய்து கொண்ட சவூதி பெண்ணொருவர் தனது கணவர் எமன் நாட்டைச் சேர்ந்தவரென 18 வருடங்களின் பின்னர் கண்டுபிடித்துள்ளார்.

18 வருடங்களுக்கு முன்னர் குறித்த நபர் தனது திருமணத்திற்கான விருப்பத்தினைத் தெரிவித்து தான் சவூதி நாட்டை சேர்ந்தவர் என்பதை நிரூபிப்பதற்கான போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

அவற்றை உண்மை என நம்பிய அந்தப் பெண் அவரை தனது கணவனாக ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்களது இரண்டு மகன்களும் ஒரு மகளும் இரண்டாம் நிலை பாடசாலைக்கு சென்றபோது அவர்கள் தமது தந்தையின் அடயாள அட்டை இலக்கத்தை குறிப்பிடும்படி கேட்கப்பட்டனர்.

“அப்போதுதான் நான் 18 வருடங்கள் மனைவியாக வாழ்ந்த அந்த மனிதன் சவூதியைச் சேர்ந்தவர் அல்ல என கண்டறிந்தேன்.

அவன் என்னை திருமணம் செய்தபோது போலி அடயாள அட்டையினை பயன்படுத்தியிருக்கிறான் எனவும் கண்டறிந்தேன். அவனைப்பற்றி நான் அறிந்து கொண்டதும் வீட்டிலிருந்து அவன் தப்பியோடிவிட்டான்” என அப் பெண் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts