வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும்  உற்பத்திகளுக்கு மாத்திரமே ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படும். உள்ளூரில் சந்தைப்படுத்தப்படும் உற்பத்திகளில் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படமாட்டாது. அத்துடன் வெளிநாட்டு ஏற்றுமதிப் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி சற்று முன்னர் தெரிவித்தார். (எனினும், ஹலால் இலட்சினை இல்லாத வகையில் வேறு வழியில் ஹலால் குறித்த தகவல்களை மக்களுக்கு வழங்கலாம்...! )

தற்போது கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசேட பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவோர் வேண்டுகோள்விடுக்கும்பட்‌சத்தில் மாத்திரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழமைபோன்று ஹலால் சான்றிதழை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சமாதானமும் இன நல்லுறவும்மிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாம் சில விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்ய வேண்டியது அவசியம் எனவும் அதனப்படையிலேயே உலமா சபை இவ்வாறானதொரு தீர்மானத்திற்கு உடன்பட்டதாகவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts