ஹலால் விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் இதுவே எமது இலக்காக இருந்தது. இது நமக்கு மகிழ்ச்சியைத்
தருகிறது. அடுத்து முஸ்லிம் பெண்களின் அபாயா தொடர்பில் நாம் கவனம் செலுத்த
வேண்டியுள்ளது என பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர்
தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் பெளத்த மகா சங்க தேரர்களும் மற்றும் இலங்கை வர்த்தக சங்க சம்மேளனமும் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஹலால் விவகார தீர்மானம் தொடர்பில் கருத்து வினவியபோதே அவர் ‘‘விடிவெள்ளி ’’க்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;-ஹலால் உணவை உண்ணுவதற்கு உலமா சபை எம்மை பலவந்தப்படுத்தியது.
இது ஒரு பெளத்த நாடு. பெளத்தர்கள் ஹலால் உண்ணத் தேவையில்லை. இந்நாட்டிலிருந்து ஹலாலை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. இந்த நியாயத்துக்காகவே நாம் போராடினோம் வெற்றியும் பெற்று விட்டோம்.அடுத்து முஸ்லிம் பெண்களின் அபாயா தொடர்பில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உங்களது பொதுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதே என்று விடிவெள்ளி வினவிய போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.ஆம், நாட்டில் 30 வருட கால யுத்தத்தில் நாம் பல இழப்பிணைச் சந்தித்து விட்டோம்.
மீண்டும் அவ்வாறான நிலை உருவாகக் கூடாது. பயங்கரவாதம் எந்த ரீதியிலும் முன்னெடுக்கப்படலாம் எமக்கென்று ஒரு கலாசாரம் இருக்கிறது. அபாயா உடை மூலம் பயங்கரவாத செயல்கள் முன்னெடுக்கப்படலாம் எனவே இதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.
நேற்று கொழும்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் பெளத்த மகா சங்க தேரர்களும் மற்றும் இலங்கை வர்த்தக சங்க சம்மேளனமும் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஹலால் விவகார தீர்மானம் தொடர்பில் கருத்து வினவியபோதே அவர் ‘‘விடிவெள்ளி ’’க்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;-ஹலால் உணவை உண்ணுவதற்கு உலமா சபை எம்மை பலவந்தப்படுத்தியது.
இது ஒரு பெளத்த நாடு. பெளத்தர்கள் ஹலால் உண்ணத் தேவையில்லை. இந்நாட்டிலிருந்து ஹலாலை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. இந்த நியாயத்துக்காகவே நாம் போராடினோம் வெற்றியும் பெற்று விட்டோம்.அடுத்து முஸ்லிம் பெண்களின் அபாயா தொடர்பில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உங்களது பொதுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதே என்று விடிவெள்ளி வினவிய போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.ஆம், நாட்டில் 30 வருட கால யுத்தத்தில் நாம் பல இழப்பிணைச் சந்தித்து விட்டோம்.
மீண்டும் அவ்வாறான நிலை உருவாகக் கூடாது. பயங்கரவாதம் எந்த ரீதியிலும் முன்னெடுக்கப்படலாம் எமக்கென்று ஒரு கலாசாரம் இருக்கிறது. அபாயா உடை மூலம் பயங்கரவாத செயல்கள் முன்னெடுக்கப்படலாம் எனவே இதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.

0 கருத்துகள்: