அட்டாளைச்சேனை, 12ஆம் பிரிவு பம்பியடி வீதியில், பிறந்து ஒருநாள் கூட
நிறைவடையாத பெண் குழந்தை ஒன்று வீதியில் வீசப்பட்ட நிலையில்
மீட்கப்பட்டுள்ளது.
இந்தப் பெண் குழந்தை நேற்று (15) இரவு பிறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று (16) காலை 6.30 மணியளவில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
குழந்தை தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
(அத தெரண நிருபர்)

0 கருத்துகள்: