
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட
உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பேச்சுவார்த்தை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு
தேர்தல் தொகுதி வாரியாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாகக்
குறிப்பிடப்படுகிறது.தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கில் இவ்வாறான
பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத இறுதியில் குருணாகலில் முதல்
கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரே இந்த கூட்டங்களை ஒழுங்கு செய்து வருவதாகத்
தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் இரண்டு சிரேஸ்ட
அமைச்சர்களை தொடர்புபடுத்திக் கொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு
வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
0 கருத்துகள்: