இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் முஸ்லிம் தமிழ் தேசியப் பேரவையின் தலைவர் அசாத் சாலி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பொதுபல சேனா அமைப்பினால் முஸ்லிம்களுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.
அடிப்படைவாத பௌத்த மதத் தேரர்கள் சட்டத்தை கையில் எடுத்து செயற்படுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்கள் அதனை வேடிக்கை பார்க்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முஸ்லிம்கள் அர்ப்பணிப்புடன் முயற்சித்து வருகின்றனர்.
முஸ்லிம் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.
சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களை பின்பற்ற வேண்டுமென்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்த வேண்டும்.
1982ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சிறுபான்மை சமூகம் தொடர்பில் செய்யப்பட்ட பிரகடனத்தை அரசாங்கம் மீறிச் செயற்பட்டுள்ளது. எந்தவொரு நாடும் சிறுபான்மை மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தக் கூடாது என இந்தப் பிரகடனத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சகல இனங்களும், சகல மதங்களும் மதிக்கப்பட வேண்டுமென்பதனை அரசாங்கத்திற்கு வலியுறுத்துமாறும் அசாத் சாலி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பொதுபல சேனா அமைப்பினால் முஸ்லிம்களுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.
அடிப்படைவாத பௌத்த மதத் தேரர்கள் சட்டத்தை கையில் எடுத்து செயற்படுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்கள் அதனை வேடிக்கை பார்க்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முஸ்லிம்கள் அர்ப்பணிப்புடன் முயற்சித்து வருகின்றனர்.
முஸ்லிம் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.
சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களை பின்பற்ற வேண்டுமென்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்த வேண்டும்.
1982ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சிறுபான்மை சமூகம் தொடர்பில் செய்யப்பட்ட பிரகடனத்தை அரசாங்கம் மீறிச் செயற்பட்டுள்ளது. எந்தவொரு நாடும் சிறுபான்மை மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தக் கூடாது என இந்தப் பிரகடனத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சகல இனங்களும், சகல மதங்களும் மதிக்கப்பட வேண்டுமென்பதனை அரசாங்கத்திற்கு வலியுறுத்துமாறும் அசாத் சாலி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 கருத்துகள்: