சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து சுமார் நான்கு இலட்சம் ரூபா செலவில் கலேவல, பட்டிவெல எனும் இடத்தில்  புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணம் செய்துள்ளனர்.  (இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...!)

கலேவல, பட்டிவெல படிகனா புராதன ரஜமகா விகாரையின்
விகாராதிபதியான மாவுனாவே சுமனதிஸ்ஸ தேரரின் வழிகாட்டலின் பேரில் பட்டிவெல 'சக்தி மித்துரு' நலன்புரி நிலையத்தினால் இந்த புத்தர் சிலை நிர்மான வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த சிலையும் விகாராதிபதியான மாவுனாவே சுமனதிஸ்ஸ தேரரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இதன் போது உரையாற்றிய விகாராதிபதி சுமனதிஸ்ஸ தேரர் தெரிவித்ததாவது,


இன்று நாட்டில் ஹலால் சான்றிதழ் தொடர்பில் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களிடம் புரிந்துணர்வற்ற ஒரு நிலைமை உருவாகியிருக்கிறது. எனினும் நாம் இலங்கையர் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. 30 வருட யுத்தமொன்றிலிருந்து மீண்டுள்ள நாம் மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.


நாம் சமய அடிப்படையில் வேறுபட்டாலும் எங்கள் உடம்பில் ஒரே நிறத்திலான இரத்தமே ஓடுகிறது. அது இலங்கையர் என்ற இரத்தம்.
எம் இருசாராருக்கும் இடையிலான நல்லுறவு வளர்க்கப்படவேண்டுமே தவிர அது தவிடு பொடியாகக் கூடாது.


அதற்கு இந்த புத்தர் சிலை சிறந்த உதாரணமாகும். இந்த புத்தர் சிலையியை நிர்மாணிப்பதில் முஸ்லிம்களும் (?) சிங்களவர்களும் இணைந்து பங்களிப்பு வழங்கியுள்ளமைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன். பட்டிவெல கிராமத்தில் நாம் இன பேதங்களுக்கு அப்பால் செயற்படுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts