சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இனங்கலவரம் ஒன்றைக் ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயற்படுகின்றனர். வெளிநாட்டு உதவியுடனேயே இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.தீர்வு பெற வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கையில் வீணாக தேவையற்ற விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ பிரதி அமைச்சர் டப்ளியு. பீ. ஏக்கநாயக்க தொரிவித்தார்.

அநுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தொரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று ஹலால் தொடர்பில் சிலர் புதிய பிரச்சிைனயொன்றைக் கொண்டு வந்துள்ளனர். வேண்டுமானால் சிங்களவர்கள் ஹலால் உணவை உண்ணலாம். விருப்பமில்லையென்றால் உண்ணாமல் விடலாம். அதில் பிரச்சனைப்பட வேண்டிய தேவை இல்லை.

உணவுப் பொதிகளில் ஹலால் சான்றிதழ் பொறிக்கப் பட்டுள்ளமையானது அவ்வுணவு ஹலாலானதா அல்லது ஹலால் அற்றதா என்பதை முஸ்லிம்கள் தெரிந்து கொள்தற்கேயாகும். இதில் சிங்களவர்களாகிய நமக்கு எதுவித பிரச்சினையும் இல்லை.

ஹலால் விடயம் எமது மூதாதையர் காலம் முதல் இருந்து வருகிறது. ஹலால் மூலம் அன்று அவர்களுக்கு ஏற்படாத பிரச்சினை இன்று நமக்கு மாத்திரம் எவ்வாறு ஏற்படும்? எனவே இது விடயத்தில் இளைஞர்களாகிய நாம் கவனமாகச் செயற்பட வேண்டும்.

30 வருடங்களாக ஏற்பட்ட யுத்தத்தால் நாம் அடைந்த துன்பங்கள் போதாதா? இன்னுமொரு இனக்கலவரம் தேவைதானா? தீர்வு பெற வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கையில் வீணாக தேவையற்ற விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது எனவும் அவர் மேலும் தொரிவித்தார்.
இனக்கலவரமொன்றை ஏற்படுத்த சிலர் எத்தணிக்கின்றனர்; ஏக்கநாயக்க 

சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இனங்கலவரம் ஒன்றைக் ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயற்படுகின்றனர். வெளிநாட்டு உதவியுடனேயே இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.தீர்வு பெற வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கையில் வீணாக தேவையற்ற விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக்  கொள்ளக்கூடாது என நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ பிரதி அமைச்சர் டப்ளியு. பீ. ஏக்கநாயக்க தொரிவித்தார்.

அநுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தொரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று ஹலால் தொடர்பில்  சிலர் புதிய பிரச்சிைனயொன்றைக் கொண்டு வந்துள்ளனர். வேண்டுமானால் சிங்களவர்கள் ஹலால் உணவை உண்ணலாம். விருப்பமில்லையென்றால் உண்ணாமல் விடலாம். அதில் பிரச்சனைப்பட வேண்டிய  தேவை இல்லை.

உணவுப் பொதிகளில் ஹலால் சான்றிதழ் பொறிக்கப் பட்டுள்ளமையானது அவ்வுணவு ஹலாலானதா அல்லது ஹலால் அற்றதா என்பதை முஸ்லிம்கள் தெரிந்து கொள்தற்கேயாகும். இதில் சிங்களவர்களாகிய நமக்கு எதுவித பிரச்சினையும் இல்லை.
 
 ஹலால் விடயம் எமது மூதாதையர் காலம் முதல் இருந்து வருகிறது. ஹலால் மூலம் அன்று அவர்களுக்கு ஏற்படாத பிரச்சினை இன்று நமக்கு மாத்திரம் எவ்வாறு ஏற்படும்? எனவே இது விடயத்தில் இளைஞர்களாகிய நாம் கவனமாகச் செயற்பட வேண்டும்.

30 வருடங்களாக ஏற்பட்ட யுத்தத்தால் நாம் அடைந்த துன்பங்கள் போதாதா? இன்னுமொரு இனக்கலவரம் தேவைதானா? தீர்வு பெற வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கையில் வீணாக தேவையற்ற விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக்  கொள்ளக்கூடாது எனவும் அவர் மேலும் தொரிவித்தார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts